Jul 27, 2026
Thisaigal NewsYouTube
KK மார்ட் கடை மீது தாக்குதல், எழுவரிடம் விளக்கம் பெறப்பட்டது
தற்போதைய செய்திகள்

KK மார்ட் கடை மீது தாக்குதல், எழுவரிடம் விளக்கம் பெறப்பட்டது

Share:

பேராக், ஏப்ரல் 01 -

பேராக், பீடோர் அருகேயுள்ள KK மார்ட் நிறுவன கடையின் மீது, கடந்த வாரம் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில், கடை பணியாளர்கள், பொதுமக்கள் என 7 நபர்களிடம் போலீஸ் விளக்கத்தைப் பதிவு செய்துள்ளது.

துரோகம் புரிந்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும் வேளை, இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை என தாப்பாஹ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் மோஹட் நாயீம் அஸ்னாவி தெரிவித்தார்.

CCTV காணொலி பதிவுகளை தவிர, சம்பவ இடத்திலிருந்து விசாரணைக்கு உதவக்கூடிய வேறு எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சம்பவ இடத்தில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு முன்பு, வாகனம் ஒன்றில் வந்த ஆடவர், அந்த கடையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்