கோலாலம்பூர், மே 02-
கோலாலம்பூர், KLCC இரட்டைக் கோபுரத்தின், முதல் மாடியுள்ள BABEL-லில், SPA மற்றும் SAUNA ஆகிய ஓய்வுத்தள அறைகள் திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் அழிந்தன.
நேற்று இரவு மணி 11.34 அளவில் கிடைத்த அவசர அழைப்பை தொடர்ந்து, 3 பகுதிகளிலுள்ள தீயணைப்பு மீட்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்தை வந்தடைந்த போது, சம்பந்தப்பட்ட ஓய்வுத்தள அறை, 100 விழுக்காடு தீக்கிரையாகியிருந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் ஃபத்தா எம் அமின் தெரிவித்தார்.
எனினும், இதர பிரிவுகளுக்கு தீ பரவாமலிருக்க, அதனை தீயணைப்பு வீரர்கள் முற்றிலுமாக அணைத்த வேளை, தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக ஃபத்தா கூறினார்.








