Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பழிவாங்கும் அரசியலுக்காக மூவார் நாடாளுமன்றம் புறக்கணிக்கப்படவில்லை!
தற்போதைய செய்திகள்

பழிவாங்கும் அரசியலுக்காக மூவார் நாடாளுமன்றம் புறக்கணிக்கப்படவில்லை!

Share:

ஜொகூர் பாரு, ஜூன் 04-

ஜோகூர், மூவார் நாடாளுமன்ற தொகுதிக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படாததற்கு, ஒற்றுமை அரசாங்கத்தின் பழிவாங்கும் அரசியலே காரணம் என அதன் உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஃபதில்லா யூசோஃப் திட்டவட்டமாக மறுத்தார்.

இவ்வாண்டு மட்டுமே, மூவார் நாடாளுமன்ற தொகுதியில், குறைந்தது 60 திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் 2.7 மில்லியன் வெள்ளியை அங்கீகரித்துள்ளதாக அவர் கூறினார்.

அவற்றில், பள்ளிவாசல்களை சீரமைக்க, 741 ஆயிரம் வெள்ளி மதிப்பை உட்படுத்திய 9 திட்டங்களும் 800 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான மக்கள்நலன் சார்ந்த 18 திட்டங்களுக்கு அடங்கும்.

மூவார் நாடாளுமன்ற தொகுதியை ஒற்றுமை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை என்பதற்கு அவைகளே போதுமான ஆதரங்களாக உள்ளதாக, ஃபதில்லா யூசோஃப் கூறினார்.

மூவார் தொகுதிக்கான ஒதுக்கீடு குறித்து இருமுறை ஃபதில்லா யூசோஃப் -புடன் பேச்சுகளை தாம் நடத்திய பின்னரும், இதுவரையில் தனது தொகுதிக்கு நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்படவில்லை என சையத் சாதிக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூற்று வெளியிட்டிருந்தார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி