Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஓரிட போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

ஓரிட போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு

Share:

ஜோகூர் பாரு, மார்ச் 7 -

வாடகை வீடுகளை ஓரிட போதைப்பொருள் மையங்களாக பயன்படுத்தி வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஜோகூர் போலீசார் முறியடித்துள்ளனர்.

இவ்வார முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் பத்து லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள பலதரப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் ம். குமார் தெரிவித்தார்.

ஜோகூர், செத்தியா இன்டா மற்றும் ஜோகூர் ஜெயா பகுதிகளில் ஐந்து ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் மற்றும் ஒரு தரை வீடு ஆகியவற்றில் கடந்த திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் நடத்தப்பட்ட வெவ்வேறு ஆறு சோதனை நடவடிக்கைகளில் பல வகையான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.

இச்சோதனை நடவடிக்கைகளில் 22 க்கும் 39 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் ஆண்கள் ஆவர். இவர்களுடன் சேர்ந்து உள்ளூரைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் அந்நிய நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் பிடிபட்டனர் என்று கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்