Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஓரிட போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

ஓரிட போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு

Share:

ஜோகூர் பாரு, மார்ச் 7 -

வாடகை வீடுகளை ஓரிட போதைப்பொருள் மையங்களாக பயன்படுத்தி வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஜோகூர் போலீசார் முறியடித்துள்ளனர்.

இவ்வார முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் பத்து லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள பலதரப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் ம். குமார் தெரிவித்தார்.

ஜோகூர், செத்தியா இன்டா மற்றும் ஜோகூர் ஜெயா பகுதிகளில் ஐந்து ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் மற்றும் ஒரு தரை வீடு ஆகியவற்றில் கடந்த திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் நடத்தப்பட்ட வெவ்வேறு ஆறு சோதனை நடவடிக்கைகளில் பல வகையான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.

இச்சோதனை நடவடிக்கைகளில் 22 க்கும் 39 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் ஆண்கள் ஆவர். இவர்களுடன் சேர்ந்து உள்ளூரைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் அந்நிய நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் பிடிபட்டனர் என்று கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.

Related News

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன