May 22, 2026
Thisaigal NewsYouTube
இந்திய இளைஞர் கீழே குதித்து தற்கொலை
தற்போதைய செய்திகள்

இந்திய இளைஞர் கீழே குதித்து தற்கொலை

Share:

ஈப்போ, ஏப்ரல் 30-

விரக்தியில் இருந்ததாக நம்பப்படும் ஓர் இந்திய இளைஞர் அடுக்குமாடி வீட்டின் நான்காவது மாடியிலிருந்த கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.26 மணியளவில் ஈப்போ, புசாட் பண்டார் பாரு பெர்ச்சாம்-மில் நிகழ்ந்தது. இது தொடர்பாக தகவல் கிடைத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, 22 வயது ஆடவரின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மருத்துவக்குழுவினர் சோதனையிட்ட போது அந்த இளைஞர் இறந்த விட்டதை உறுதிசெய்தனர்.

தலையில் ஏற்பட்ட கடும் காயத்தினால் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகவும், இதனை திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் சைனால் ஆபிதீன் அபாங் அஹ்மத் தெரிவித்தார்.

சவப்பரிசோதனைக்காக அந்த ஆடவரின் உடல் ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News