Jan 18, 2026
Thisaigal NewsYouTube
பயன்படுத்தப்படாத MITRA நிதிக் குறித்து அரசாங்கத்தின் திட்டம் என்ன?
தற்போதைய செய்திகள்

பயன்படுத்தப்படாத MITRA நிதிக் குறித்து அரசாங்கத்தின் திட்டம் என்ன?

Share:

இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப் பிரிவான MITRA விற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பயன்படுத்தப்படாத நிதிக் குறித்து அரசாங்கம் எத்தகைய திட்டத்தைக் கொண்டுள்ளது என்று Ipoh Barat எம்.பி. M. Kulasegaran இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
பயன்படுத்தப்படாத MITRA நிதி அடுத்தடுத்த பட்ஜெட்டில் சேர்த்துக்கொள்ளப்படுமா? என்றும் அவர் வினவினார்.


ஒவ்வொரு முறையும் MITRA விற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போது கிட்டத்தட்ட பாதி நிதி பயன்படுத்தப்படாமல் அரசாங்கத்திற்குத் திருப்பிக் கொடுக்கப்படுவதாக Kulasegaran குறிப்பிட்டார்.
குறிப்பாக, கடந்த 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சமூகத்திற்காக MITRA விற்கு 10 கோடி வெள்ளி நிதி ஒதுகப்பட்டுள்ளது. இதில் 6 கோடியே 50 லட்சம் வெள்ளி மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதாக Kulasegaran தெரிவித்தார்.


கிட்டத்தட்ட 4 கோடி வெள்ளி இந்திய சமுதாயத்திற்குச் சேர்க்கப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்படும் MITRA நிதி இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையில் அடுத்தடுத்த பட்ஜெட்டில் சேர்த்துக்கொள்ளப்பட்டு அந்த நிதி முழுமையாக இந்திய சமுதாயத்திற்குச் சென்றடைய வேண்டும், அதற்கான வழிமுறையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று Kulasegaran கேட்டுக்கொண்டார்.

Related News

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் அவசியம்: அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை!

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் அவசியம்: அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!