Mar 12, 2026
Thisaigal NewsYouTube
சமையல் எண்ணெய் விலை நிலைநிறுத்தம் !
தற்போதைய செய்திகள்

சமையல் எண்ணெய் விலை நிலைநிறுத்தம் !

Share:

நாளை நவம்பர் 8 தொடங்கி அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை புட்டியில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெயின் விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்துள்ளது.

நியாயமற்ற விலை அதிகரிப்பால் மக்கள் அவதியுறக்கூடாது என்பதற்காக அவ்வாறான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு விளக்கியது.
விலைக் கட்டுப்பாட்டு சட்டம் 2011இன்படியும் அரசாங்கத்தின் Payung Rahmah திட்டத்தின்படியும் சமையல் எண்ணெய்க்கான சில்லறை விலையை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஒரு கிலோ சமையல் எண்ணெய் 6 வெள்ளி 90 காசாகவும்
2 கிலோ சமையல் எண்ணெய் 13 வெள்ளி 30 காசாகவும்
3 கிலோ சமையல் எண்ணெய் 19 வெள்ளி 60 காசாகவும்
5 கிலோ சமையல் எண்ணெய் 30 வெள்ளி 90 காசாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்யும் தரப்பு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சின் கண்காணிப்பு நடவடிக்கை இருந்தாலும் வரம்பு மீறிய விலையில் விற்கும் தரப்பினர் குறித்து பொது மக்களும் புகார் அளிக்கலாம் என அவ்வமைச்சு மேலும் கூறியது.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து