Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கடும் வறிய நிலைக்கான அளவீட்டை அரசாங்கம் ஆராய வேண்டும்
தற்போதைய செய்திகள்

கடும் வறிய நிலைக்கான அளவீட்டை அரசாங்கம் ஆராய வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 06-

நாட்டில் கடும் வறிய நிலையில் உள்ளவர்களை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும் வறுமை குறியீட்டு அளவை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டுமென பொருளாதார நிபுணர் பெனடிக்ட் வீரசேன வலியுறுத்தியுள்ளார்.

பகாங்-ங்கில் மக்களின் கடும் வறிய நிலையை, மாநில அரசாங்கம் வெற்றிகரமாக துடைத்தொழித்திருப்பதாக, பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மெயில் அண்மையில் கூறியிருந்ததை மேற்கோள்காட்டி அவர் அக்கூற்றை முன்வைத்துள்ளார்.

அரசாங்கம், கடும் வறிய நிலைக்கான வரையறையைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நடப்பு சூழலில், கடும் வறிய நிலை வெற்றிகரமாக துடைத்தொழிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் கூறிவருவது, உண்மையான சூழலை எடுத்துரைக்கவில்லை.

கடந்த காலங்களைப் போன்றே, தற்போது உள்ள வறுமைக்கோட்டிக்கான அளவீட்டு முறை மிக குறைவாக உள்ளது. மக்களின் வாழ்க்கை செலவினங்களை அது முழுமையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

சம்பளத்தை அடைப்படையாக கொண்டு கடும் வறுமை நிலையை கண்டறிவதற்கு பதிலாக, பல பரிமாணங்களை உட்படுத்திய வறுமைக் குறியீட்டு முறையை அரசாங்கம் பயன்படுத்துவதே ஏற்புடையதாக இருக்குமெனவும் பெனடிக்ட் வீரசேன கூறினார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி