May 4, 2026
Thisaigal NewsYouTube
கெதெரே கொலை வழக்கு: 60 வயதான தம்பதி விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

கெதெரே கொலை வழக்கு: 60 வயதான தம்பதி விடுவிப்பு

Share:

கெதெரே கொலை வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 60 வயதான தம்பதி, போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றக் காவல் முடிவதற்கே முன்பே அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டதாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் முகமது அஸ்மிர் டமிரி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், விடுவிக்கப்பட்ட தம்பதியினர், சந்தேக நபர்களில் ஒருவரின் பெற்றோர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, அதிகாலை 12.30 மணியளவில், பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கெதெரே, ஜாலான் கம்போங் குபாங் கியாட் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கெதெரே கொலை வழக்கு: 60 வயதான தம்பதி விடுவிப்பு | Thisaigal News