கடந்த 15வது பொதுத் தேர்தலில் சிகாமாட் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த வெற்றியைத் தடை செய்யக் கோரி அங்கு போட்டியிட்ட தேசிய முன்னணியின் வேட்பாளர் எம் ராமசாமி தாக்கல் செய்த பெட்டிஷனை அவர் மீட்டுக் கொண்டுள்ளார்.
சிகாம்மாட்டில் வெற்றி பெற்ற ஆர் யுவனேஸ்வரனை குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட பெட்டிஷனை எம் ராமசாமி மீட்டுக்கொள்ள தேர்தல் நீதிமன்ற நீதிபதி ரொஹானி இஸ்மாயில்அனுமதித்துள்ளார்.
தற்போது அமைந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் இராமசாமியும் யுவனேஸ்வரனும் ஒரு பகுதியாய் இருக்கின்ற நிலையில் அந்த பெட்டிஷன் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இராமசாமியின் வழக்கறிஞர் முஹமாட் ஷாஃபீ அப்துல்லா தெரிவித்தார்.








