ஜோகூர் பாரு, ஜூலை.11-
ஜோகூர் மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று ஜூலை 11-ஆம் தேதி காலை பெரும்பாலான பகுதிகளில் தெளிவான வானிலையுடன் விறுவிறுப்பாகத் தொடங்கியது.
மாநிலம் முழுவதும் வானிலை சாதகமாக இருந்த போதிலும், முவார் பகுதியில் அதிகாலை பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருகை தந்தனர்.
இன்று காலை 8 மணியளவில், மாநிலம் முழுவதும் 1,076 வாக்குச் சாவடிகளும், 4,889 வாக்குப் பதிவு மையங்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில், 56 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளுக்கான மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
காலை 9 மணி நிலவரப்படி 7.97 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.








