Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை
அரசியல்

பிகேஆர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, மே.18-

பிகேஆர் கட்சியின் இளைஞர், மகளிர் பிரிவுகளின் மாநாட்டை மே 22ஆம் தேதி ஜோகூர் பாருவில் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி திறந்து வைக்க மறுத்ததாகக் கூறப்படும் அறிக்கையை அக்கட்சி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது குறித்து கேட்ட போது கட்சியின் பொதுச் செயலாளர் புஃஸியா சால்லே சுருக்கமாக இவ்வாறு பதிலளித்தார்.

பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நூருல் இஸா அன்வாருக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் ரஃபிஸி இந்த மாநாட்டைத் திறந்து வைக்க மறுப்பதாக மலேசியா காஸெட் செய்தி வெளியிட்டது. கோத்தா கினபாலுவில் நடைபெற்ற சபா மாநிலத் தேர்தல் இயந்திரத்தின் தொடக்க விழாவிற்கு பிகேஆர் சபா ரஃபிஸியை அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பிகேஆர் இளைஞர், மகளிர் மாநாட்டைத் திறந்து வைப்பதற்கான அழைப்பை ஏற்க முடியாது என்று ரஃபிஸி பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!