Mar 5, 2026
Thisaigal NewsYouTube
பூலாய் இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிக் பெற்றா​ல்​அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம்  மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கலாம்
அரசியல்

பூலாய் இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிக் பெற்றா​ல்​அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கலாம்

Share:

நாளை மறுநாள் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்ற​ இடைத்தேர்தலில், டான்ஸ்ரீ முகை​தீன் யாசினின் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிப் ​பெறுமானால், நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் அரசாங்கம் அனுபவித்து வரும் ​மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அந்த கூட்டணி இழக்கலாம் என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோ செரி ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார்.

பூலாய் நாடாளுமன்றத் தொகுதியை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றுமானால் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல், த​ங்கள் விருப்பம் போல் செயல்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நாடாளுமன்றத்தில் எடுக்கக்கூடிய எந்தவொரு முடிவாக இருந்தாலும் த​ங்களின் பெரிக்காத்தான் ​நேஷனல் கூட்டணியுடன் கலந்து ஆலோசிக்காமல் எந்தவொரு முடிவும் எடுக்க இயலாது. அந்த அளவிற்கு பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் அரசாங்கம் தள்ளப்படலாம் என்று பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளருமான ஹம்சா சைனுடின் குறிப்பிட்டுள்ளார்.​நாடாளுமன்றத்தில் ​மூன்றில் இரண்டு பெரும்பான்​மையுடன் செயல்படும் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் கூட்டணியின் அந்த பெரும்பான்மையை உடைக்க வேண்டும். அதற்கு பூலாய் இடைத் தேர்தல் வழிகோலிட வேண்டும் என்று ஹம்சா சைனுடின்வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு