நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், கேள்வி - பதில் அங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர், துணையமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வருகையளிக்காமல் இருப்பது பெரும் அதிருப்தியை அளிக்கிறது என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கடுமையாக சாடினார்.
வெளியுறவு அமைச்சருக்கு சம்பந்தப்பட்ட கேள்விக்கு அமைச்சின் துணையமைச்சரும் பதில் அளிக்கவில்லை. இதனால் அந்தக் கேள்வியை ஒத்தி வைக்கும்படி சபாநாயகர் சம்பந்தப்பட்ட உத்தரவிட்டார்.
அதிருப்தி அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகையில், நாடாளுமன்ற வருகையளிக்காத அமைச்சர்கள், துணையமைச்சர்களின் போக்கு நடப்பு அரசாங்கத்தின் பலவீனத்தை காட்டுகிறது என்று அவர் சாடினார்.
திறனற்ற அரசாங்கத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வழிநடத்தி கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.







