Aug 11, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் மீண்டும் போட்டியின்றி தேர்வு
அரசியல்

பிகேஆர் தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் மீண்டும் போட்டியின்றி தேர்வு

Share:

பெட்டாலிங் ஜெயா, மே.10-

பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று முடிந்த நிலையில் கட்சியின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து பிகேஆர் தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா இன்று அறிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பிகேஆர் தலைவராக இருந்து வரும் டத்தோஸ்ரீ அன்வார், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது மூலம், 2025 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குக் கட்சிக்கு தலைமையேற்று வழிநடத்துவார் என்று டாக்டர் ஸாலிஹா குறிப்பிட்டார்.

பிகேஆர் கட்சியின் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வேப்புமனுத் தாக்கல் நேற்று முன்னிரவு 11.59 மணியுடன் முடிவுற்றது. தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவாக தொகுதிகளிடமிருந்து 251 வேட்பாளர் நியமனங்கள் கிடைத்து இருப்பதாக டாக்டர் ஸாலிஹா தெரிவித்தார்.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது