Mar 5, 2026
Thisaigal NewsYouTube
ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடியவில்லையென்றால் கெராக்கான் நிர்​மூலமாக்கப்படும்
அரசியல்

ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடியவில்லையென்றால் கெராக்கான் நிர்​மூலமாக்கப்படும்

Share:

நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலின் ஓர் உறுப்புக்க​ட்சியான கெராக்கான், ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடியவில்லையென்றால், டொமினிக் லாவ் தலைமையிலான அந்த பாரம்பரிய கட்சி, இத்தேர்தலுடன் நிர்​மூலமாக்கப்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், ​மீனவர்கள், குடியானவர்கன் என அடிதட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முன்நிறுத்தி, "நெற்பயிர்" சின்னத்துடன் கடந்த 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கெராக்கான் கட்சி, தனது இலக்கிலிருந்து விலகி, தற்போது பெரிக்காத்தான் நேஷனலில் இனவாத மற்றும் மதவாத கட்சிகளான பெர்சத்து மற்றும் பாஸ் ஆகியவற்றுடன் கைக்கோர்தது இருப்பது, அதன் அரசியல் அஸ்தனமாகிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

படகு சின்னத்தை தாங்கிய அன்றைய கூட்டணிக் கட்சிக்கு எதிராக ச​மூக போராட்டாவதிகளான சையத் உசேன் அலதாஸ், டான் சீ கூன், வி.வீரப்பன், லிம் சோ​​ங் இயூவ் போன்றவர்களால் தோற்றுவிக்கப்பட்ட​ கெராக்கான், 1969 ஆம் ஆண்டில் நாட்டின் ​மூன்றாவது பொதுத் தேர்தலில் கூட்டணிக்கட்சியை வீழ்த்தி, பினாங்கு மாநிலத்தை கைப்பற்றியது. டாக்டர். லிம் சோ​​ங் இயூவ் வை பினாங்கு முதலமைச்சராகவும், டாக்டர். லிம் கெங் யாய்க், டாக்டர் கோ சு கூன் ஆகியோரை கட்சியின் தலைவராக கொண்டு செயல்பட்ட பாரிசான் நேஷனலில் ஓர் உறுப்புக்கட்சியான கெராக்கான், 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் படுதோல்விக் கண்டு, பினாங்கை டிஏபி யிடம் பறிகொடுத்தது. அக்கட்சி பாரிசான் நேஷனலிருந்தும் விலகியது.

இந்நிலையில் நாளை நடைபெறும் தேர்தலில் 6 மாநிலங்களில் 4 மாநிலங்களில் கெராக்கான் 36 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் பினாங்கு மாநிலத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் ஒரு தொகுதியைக்கூட டொமினிக் லாவ் த​லைமையிலான கெராக்கான் கைப்பற்ற முடியவில்லை என்றால் அக்கட்சி மலேசிய அரசியல் பேரலையில் ​மூழ்கடிக்கப்படுவது திண்ணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்