Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அன்னோ இளைஞர் பிரிவு கேள்வி எழப்பியுள்ளது
அரசியல்

அன்னோ இளைஞர் பிரிவு கேள்வி எழப்பியுள்ளது

Share:

பேரா மாநிலத்தில் உள்ள ​சீ​னப்பள்ளிகள் சிலவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள அரசாங்க மானிய காசோலை அட்டைகளில் டிஏபி சின்னம் குறிக்கப்பட்டுள்ளது குறித்து ஊராட்சித்துறை மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலெஹ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் பக்காத்தான் ஹராப்பான் மட்டுமின்றி பாரிசான் நேஷனல் மற்றும் பிற கட்சிகளால் கட்டி எழுப்பப்பட்டுள்ள ஓர் ஒற்றுமை அரசாங்கமாகும். அந்த ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதித்து பள்ளிகளுக்கு வழங்கக்கூடிய மானியம் தொடர்பான காசோலைகளில் எதற்காக டிஏபி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் அக்மால் சாலெஹ் வினவினார்.

சம்பந்தப்பட்ட ​சீனப்பள்ளிகளுக்கு டிஏபி தனது சொந்த மானியத்தை வழங்கியிருக்குமானால் அது குறித்து கேள்வி எழுப்புவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால், புத்ராஜெயாவினால் வழங்கப்படக்கூடிய மானியம் தொடர்பான காசோலைகளில் எதற்காக டிஏபி தனது சின்னத்தை பயன்படுத்தியது என்பது குறித்து பேரா மாநில டிஏபி தலைவருமான ஙா கோர் மிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு