Mar 4, 2026
Thisaigal NewsYouTube
அக்மால் இன்று தனது முடிவை அறிவிப்பார்: ஸாஹிட் ஹமிடி
அரசியல்

அக்மால் இன்று தனது முடிவை அறிவிப்பார்: ஸாஹிட் ஹமிடி

Share:

கோலாலம்பூர், ஜனவரி.14-

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலே, இன்று நடைபெறும் கட்சியின் பொதுப்பேரவையில், தனது முடிவு குறித்த ஓர் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அக்மால் சாலேவைத் தாம் நேரில் சந்தித்ததாகவும், அவருக்குச் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், இன்று அம்னோ பொதுப்பேரவையில் அந்த முக்கிய அறிவிப்பை அக்மால் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ விலக வேண்டும் என்ற தனது கருத்துக்கு, கட்சித் தலைவரிடமிருந்து எதிர்மறையான கருத்துகள் கிடைத்ததைத் தொடர்ந்து, தாம் பதவி விலகும் நேரம் வந்துவிட்டதாக அக்மால் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், தற்போது தான் வகிக்கும் பதவிகள் குறித்து அம்னோ தலைவர் மற்றும் மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ராவுஃப் யுசோ ஆகிய இருவரும் எடுக்கும் முடிவுகளுக்கு தான் கட்டுப்படுவதாகவும் அக்மால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி:  மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி: மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்ட ஊழல் வழக்கு விசாரணை /  ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய நீதிமன்றம் காலக்கெடு

பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்ட ஊழல் வழக்கு விசாரணை / ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய நீதிமன்றம் காலக்கெடு

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

புக்கிட் மெர்தாஜம் ஆலய விவகாரம்: எவரும் மத உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ மாற முயற்சிக்க வேண்டாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

புக்கிட் மெர்தாஜம் ஆலய விவகாரம்: எவரும் மத உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ மாற முயற்சிக்க வேண்டாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன