Mar 4, 2026
Thisaigal NewsYouTube
எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி:  மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்
அரசியல்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி: மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

Share:

தமக்கு எதிராக, தனது முன்னாள் ஆய்வு உதவியாளர் முகமது யுசோஃப் ரௌத்தர் தாக்கல் செய்திருந்த பாலியல் வன்கொடுமை வழக்குடன் தொடர்புடைய எட்டு சட்ட கேள்விகளை, கூட்டரசு நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்க மறுத்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் திரும்பப் பெற்றுள்ளார்.

இதனையடுத்து, வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி, மாலை 5 மணிக்குள், வழக்குச் செலவுத் தொகையான 50 ஆயிரம் ரிங்கிட்டை, முகமது யுசோஃப்க்கு அன்வார் செலுத்த வேண்டுமென, மூன்று பேர் அடங்கிய அப்பீல் நீதிமன்ற தலைமை நீதிபதி வோங் கியான் கியோங் உத்தரவிட்டுள்ளார்.

தம்மை எதிர்த்து வழக்கு தொடர முடியாத படி, இம்யூனிட்டி தொடர்பான எட்டு சட்டக் கேள்விகளை, அன்வார் கூட்டரசு நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்க விரும்பினார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்ததாக, அன்வாரின் முன்னாள் ஆய்வு உதவியாளரான முகமது யுசோஃப் தொடர்ந்த வழக்கு தொடர்பில், அன்வார் சார்பில் அம்மனுவானது தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்ட ஊழல் வழக்கு விசாரணை /  ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய நீதிமன்றம் காலக்கெடு

பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்ட ஊழல் வழக்கு விசாரணை / ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய நீதிமன்றம் காலக்கெடு

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

புக்கிட் மெர்தாஜம் ஆலய விவகாரம்: எவரும் மத உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ மாற முயற்சிக்க வேண்டாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

புக்கிட் மெர்தாஜம் ஆலய விவகாரம்: எவரும் மத உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ மாற முயற்சிக்க வேண்டாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன

புக்கிட் ஜெலுத்தோங் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம்: உரிமைகளை உறுதி செய்ய 23 முன்னாள் தொழிலாளர்களுடன் பாப்பாராய்டு நேரடிச் சந்திப்பு

புக்கிட் ஜெலுத்தோங் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம்: உரிமைகளை உறுதி செய்ய 23 முன்னாள் தொழிலாளர்களுடன் பாப்பாராய்டு நேரடிச் சந்திப்பு