ஆறாம் வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வியைத் தொடங்குவதற்கான சேர்க்கை முறைக்குத் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கல்வித் துணை அமைச்சர் வொங் கா வோ தெரிவித்தார்.
நேற்று வரையிலான தரவுகளின்படி, 2027-ஆம் ஆண்டு கல்வித் தவணைக்காக மொத்தம் 3 லட்சத்து 51 ஆயிரத்து 789 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஐந்து வயதுடைய 51 ஆயிரத்து 457 சிறுவர்களின் விண்ணப்பங்களும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். குழந்தைகளின் தயார் நிலை மற்றும் கல்வி அமைச்சின் புதிய கட்டமைப்பு மீது பெற்றோர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையே இது காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று நாடாளுமன்ற மேலவையில் கல்வி அமைச்சு தொடர்பான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அவர், மாணவர் சேர்க்கை அதிகரிப்பிற்கு ஏற்ப பாலர் பள்ளிக் கல்வி வசதிகளையும் அரசு மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.








