Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன
அரசியல்

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன

Share:

ஆறாம் வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வியைத் தொடங்குவதற்கான சேர்க்கை முறைக்குத் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கல்வித் துணை அமைச்சர் வொங் கா வோ தெரிவித்தார்.

நேற்று வரையிலான தரவுகளின்படி, 2027-ஆம் ஆண்டு கல்வித் தவணைக்காக மொத்தம் 3 லட்சத்து 51 ஆயிரத்து 789 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஐந்து வயதுடைய 51 ஆயிரத்து 457 சிறுவர்களின் விண்ணப்பங்களும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். குழந்தைகளின் தயார் நிலை மற்றும் கல்வி அமைச்சின் புதிய கட்டமைப்பு மீது பெற்றோர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையே இது காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று நாடாளுமன்ற மேலவையில் கல்வி அமைச்சு தொடர்பான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அவர், மாணவர் சேர்க்கை அதிகரிப்பிற்கு ஏற்ப பாலர் பள்ளிக் கல்வி வசதிகளையும் அரசு மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

Related News

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்:  சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்: சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து