Mar 10, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து
அரசியல்

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

Share:

பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமத்தைச் சேர்ந்த 30 சிறார்கள் மற்றும் அவர்களது காப்பாளர்கள் இன்று மலேசிய நாடாளுமன்றத்திற்குச் சிறப்பு வருகை மேற்கொண்டனர்.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயரின் ஏற்பாட்டில் பேருந்து மூலம் வருகை தந்த இந்தச் சிறார்கள், நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களை நேரடியாகக் கண்டுகளிக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றனர்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் ஒரு பகுதியாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அந்தச் சிறார்களை நேரில் சந்தித்து அன்புடன் வரவேற்றார்.

நாடாளுமன்றத்தின் உயரிய ஜனநாயகக் கடமைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைச் சிறுவயதிலேயே மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்தச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறார்களுடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலன்கள் குறித்துக் கேட்டறிந்து உற்சாகப்படுத்தினார்.

தங்கள் தொகுதி எம்பி-யுடன் நாட்டின் மிக உயரிய பரிபாலனத்துக்கு வந்து பிரதமரைச் சந்தித்தது, ஆசிரமச் சிறார்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related News

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்:  சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்: சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து