Mar 4, 2026
Thisaigal NewsYouTube
ஸாஹிட் மற்றும் மலாக்கா முதலமைச்சரின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன்: அக்மால்
அரசியல்

ஸாஹிட் மற்றும் மலாக்கா முதலமைச்சரின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன்: அக்மால்

Share:

மலாக்கா, ஜனவரி.13-

தான் வகித்து வரும் பதவிகள் குறித்து அம்னோ தலைவர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியும் மலாக்கா மாநில முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யுசோவும் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் தான் கட்டுப்பட இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே தெரிவித்துள்ளார்.

மலாக்காவிலுள்ள மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட தன்னைத் தேர்தலில் நிறுத்தியதும், கிராமப்புற மேம்பாடு, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராகத் தன்னைத் தேர்ந்தெடுத்ததும் அவர்கள் இருவர் தான் என்பதால், அவர்களிடமே அந்த முடிவுகளை விட்டு விடுவதாக அக்மால் குறிப்பிட்டுள்ளார்.

தான் எந்த ஓர் அறிவிப்பையும் வெளியிடுவதாக இருந்தாலும், அவர்கள் இருவரின் ஒப்புதலைக் கேட்க வேண்டும் என்றும் அக்மால் தனது முகநூல் பக்கத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், தனது பதவிகளிலிருந்து விலகும் நேரம் வந்து விட்டதாக அக்மால் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்ததையடுத்து, அவர் பதவி விலகப் போவதாக அம்னோ வட்டாரங்களில் பேச்சு வார்த்தைகள் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி:  மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி: மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்ட ஊழல் வழக்கு விசாரணை /  ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய நீதிமன்றம் காலக்கெடு

பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்ட ஊழல் வழக்கு விசாரணை / ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய நீதிமன்றம் காலக்கெடு

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

புக்கிட் மெர்தாஜம் ஆலய விவகாரம்: எவரும் மத உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ மாற முயற்சிக்க வேண்டாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

புக்கிட் மெர்தாஜம் ஆலய விவகாரம்: எவரும் மத உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ மாற முயற்சிக்க வேண்டாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன