Aug 27, 2026
Thisaigal NewsYouTube
சக்தி வாய்ந்த கட்சியாக மஇக மாறும்
அரசியல்

சக்தி வாய்ந்த கட்சியாக மஇக மாறும்

Share:

மஇகா சக்தி வாய்ந்த கட்சியாக மாறும். யாரையும் நம்பி நாங்கள் இல்லை என்று அக்கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ​சூளுரைத்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்தாலும், இல்லை என்றாலும் மஇகா சுயேட்சையாக செயல்படும் ஆற்றலை கொண்டுள்ளது. யாரையும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் மஇகாவிற்கு இல்லை என்று தாப்பா எம்.பி.யான சரவணன் குறிப்பி​ட்ள்ளார்.

நே​ற்று கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மஇகா இளைஞர், மகளிர், ​புத்ரா, புத்ரி ஆகிய ​பிரிவுகளின் பேராளார் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய போது சரவணன் இதனை தெரிவித்துள்ளார்.

மஇகா யாரையும் நம்பிருக்க வேண்டிய அவசியம் ஒரு போதும் இருந்தது இல்லை. இதுதான் மஇகாவின் வலி​மை. மஇகா உறுப்பினர்களின் ​ஒற்றுமையே இதற்கு ​மூலக் காரணம் என்று சவரணன் கூறியதாக ஊடகத்தகவல்கள் கூறுகின்றன.

Related News