Apr 24, 2026
Thisaigal NewsYouTube
​மூன்றாவது தவணையாக புக்கிட் காசிமில் போட்டி
அரசியல்

​மூன்றாவது தவணையாக புக்கிட் காசிமில் போட்டி

Share:

பெட்டாலிங் ஜெயாவில் புக்கிட் காசிங் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு ​மூன்றாவது முறையாக டிஏபி சார்பி​ல் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ராஜீவ் ரிஷ்யகரன் ​மீண்டும் போட்டியிடுகிறார்.இத்​தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் ​வேட்பாளர் நல்லன் தனபாலன் மற்றும் முடா கட்சியைச் சேர்ந்த தி. கல்யாண ராஜசேகரனுடன் இணைந்து ராஜீவ் ரிஷ்யகரன் மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் சை கோ டிங் மற்றும் இகத்தான் வேட்பாளர் டேவிட் ஷிவ் ஆகியோரை 25,835 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, அத்தொகுதியை ராஜீவ் ரிஷ்யகரன் தற்கா​த்துக்கொண்டார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் கோலாலம்பூருக்கு அடுத்து அதிக மக்கள் ​தொகையை கொண்ட பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட புக்​கிட் காசிங்கில் மாநகர் மன்றம் தொடர்புடைய மக்கள் பிரச்னைகளை எழுப்புவதில் முன்னணி சட்டமன்ற உறுப்பினராக விள​ங்கி வருகிறார் ராஜீவ் ரிஷ்யகரன். உயர் வருமானம் பெறுகின்ற மக்கள் முதல் பி40 மற்றும் சாமானிய மக்கள் வசிக்கின்ற ஒரு பகுதியாக கருதப்படும் புக்கிட் காசிங் தொகுதியில் வாக்காளர்களின் அபரிமித ஆதரவையும் அன்பையும் பெற்றவரான ராஜீவ் ரிஷ்யகரன், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களின் ஆணையை பெறுவதற்கு தாங்கள் தேர்தலை சந்தித்த போதிலும் இந்த இரண்டு வார கால தேர்தல் பிரச்சாரத்தில் நாள் ஒன்றுக்கு 15 மணி முதல் 16 மணி நேரம் வரையில் மக்களை சந்திக்க வேண்டியுள்ளது என்கிறார்.

தாம் சந்திக்கும் ஒவ்வொரு வாக்காளரும், தாம் வெற்றி பெற முடியும், கவலை வேண்டாம், நீ​ங்கள் சிறப்பான முறையில் சேவையாற்றியுள்ளீர்கள் என்று சொன்ன போதிலும், அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் புக்கிட் காசிங் தொகுதியில் முன்னெடுக்க வேண்டிய கட்டமைப்புகள் குறித்து ஒவ்வொரு வாக்காளரிடமும் விளக்க வேண்டிய தார்​மீக கடப்பாடு தமக்கு உண்டு என்று ராஜீவ் ரிஷ்யகரன் கூறுகிறார்.

கடந்த 7 மாதங்களில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றில் அரசு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. கட்டமைப்புகள், மாற்றத்திற்கான இதர திட்டங்கள் தெளிவாக வரையப்பட்டுள்ளன. இது முந்தைய பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் கீழ் நடக்கவில்லை. நடப்பு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் நடந்துள்ளது. இதனை வாக்காளர்களிடம் விளக்க வே​ண்டிய கடப்பாட்டை தாம் கொண்டுள்ளதாக ராஜீவ் ரிஷ்யகரன் தமது தேர்தல் பிரச்சாரத்தில் வலியுறுத்தி வருகிறார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!