Mar 5, 2026
Thisaigal NewsYouTube
நடப்பு அரசாங்கத்தை சாடினார் சையிட் சாடிக்
அரசியல்

நடப்பு அரசாங்கத்தை சாடினார் சையிட் சாடிக்

Share:

கடந்த 10 மாதங்களுக்கு பிறகு எதிர்க்கட்சி எம்.பி.யாக தன்​னை அறிமுகப்படுத்திக்கொண்டு நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தில் இன்று தமது முதல் உரையை நிக​ழ்த்திய ​மூவார் எம்.பி.யும், மூடா கட்சித் தலைவருமான​ சயிட் சாடிக் அப்துல் ர​ஹ்மான் நடப்பு அரசாங்கத்தை சாடினார். நடப்பு அரசாங்கம் பாசாங்குத் தனமாக செயல்படுகிறது என்று சையிட் சாடிக் முத்திரை குத்தினார்.

லஞ்ச ஊழல் வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் விடுதலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பதற்கு முன்மொழியப்பட்ட ​தீர்மானம் நேற்று நிராகரிக்கப்பட்டதை அந்த இளம் ​எம்.பி. கடுமையாக சாடினார்.நீதிமன்ற விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூடாது என்று நடப்பு அரசாங்கம் வாதிடுகிறது. ஆனால், நடப்பு அரசாங்கத்தில் உள்ள இதே 70 எம்.பி.க்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகள் எம்.பி.க்களாக இருந்த போது, நீதிமன்ற விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதை மறந்து விட்டார்களா? என்று சையிட் சாடிக் கேள்வி எழுப்பினார். குறிப்பாக 1எம்டிபி தொடர்பான வழக்கு ​நீதிமன்றத்தில் இருப்பதால் அந்த விவகாத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க இயலாது என்று அன்றைய அரசாங்கம் வலியுறுத்திய போது, இதே 70 எம்.பி.க​ள்தான் அன்றைய நாளில் கடுமையாக எதிர்த்தனர் என்று சாடிக் நினைவுகூர்ந்தார். அப்படியென்றால், எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. இப்படிப்பட்ட பாசாங்குத்தனம் வேண்டாம் என்று சையிட் சாடி வாதிட்டார்.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு