இந்திய சமூகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைக்க மஇகா தயாராக இருப்பதாகவும்,சாதியை அடிப்படையாக கொண்ட கட்சிகளுடன் தங்களால் ஒருபோதும் ஒத்துழைக்க முடியாது என்றும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
மஇகா ஓர் அரசியல் கட்சி. சாதி அமைப்பு அல்ல. அரசியல் ரீதியாக உள்ள கட்சிகளுடன் ஒத்துழைக்க முடியும், சாதி அமைப்புகளுடன் அல்ல என்று நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகத்தில் எந்த கட்சி, சாதி அடிப்படையில் செயல்படுகிறது, யாரை மேற்கோள்காட்டி இந்த உவமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பதை விக்னேஸ்வரன் விவரிக்கவில்லை என்றாலும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவாக ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிப்பதற்கு மஇகாவின் முன்னாள் தலைவர்கள் மற்றும் இதர அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சாதி அமைப்பு ஒன்றின் தலைவரை மேற்கோள்காட்டியே இந்த உவமை காட்டப்பட்டுள்ளது என்று மலேசியா கினி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


