இந்திய சமூகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைக்க மஇகா தயாராக இருப்பதாகவும்,சாதியை அடிப்படையாக கொண்ட கட்சிகளுடன் தங்களால் ஒருபோதும் ஒத்துழைக்க முடியாது என்றும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
மஇகா ஓர் அரசியல் கட்சி. சாதி அமைப்பு அல்ல. அரசியல் ரீதியாக உள்ள கட்சிகளுடன் ஒத்துழைக்க முடியும், சாதி அமைப்புகளுடன் அல்ல என்று நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகத்தில் எந்த கட்சி, சாதி அடிப்படையில் செயல்படுகிறது, யாரை மேற்கோள்காட்டி இந்த உவமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பதை விக்னேஸ்வரன் விவரிக்கவில்லை என்றாலும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவாக ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிப்பதற்கு மஇகாவின் முன்னாள் தலைவர்கள் மற்றும் இதர அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சாதி அமைப்பு ஒன்றின் தலைவரை மேற்கோள்காட்டியே இந்த உவமை காட்டப்பட்டுள்ளது என்று மலேசியா கினி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


