Aug 13, 2026
Thisaigal NewsYouTube
மூடா கட்சியின் தலைவராக சையிட் சாடிக் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்
அரசியல்

மூடா கட்சியின் தலைவராக சையிட் சாடிக் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.26-

லஞ்சம் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய நீதிமன்றக் குற்றச்சாட்டுகளிலிருந்து சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளதால் அவர், மீண்டும் மூடா கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூடா கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் அமீரா அயிஷா அப்துல் அஸிஸ், கட்சியின் தலைமைத்துவப் பதவியை சையிட் சாடிக்கிற்கு விட்டுக் கொடுத்து, தாம் மீண்டும் துணைத் தலைவர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

மூடா கட்சிக்கு சையிட் சாடிக் மீண்டும் புத்துயிர் அளிக்க முடியும். பழைய வேகத்தில் கட்சியைத் தலை நிமிரச் செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மூவார் எம்.பி.யான சையிட் சாடிக் மீது ஏற்பட்ட களங்கம் துடைக்கப்பட்டு விட்டது. எனவே அவர் மீண்டும் மூடா கட்சிக்குத் தலைமையேற்பதில் இனி எந்தத் தடையும் இல்லை என்று அமீரா குறிப்பிட்டார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்