அரசியல் நடத்தியது போதும், மாநிலத்திற்கும் மக்களுக்கும் சேவையாற்ற முற்படுங்கள் என்று மக்கள் பிரதிநிதிகளை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார்.
அரசியல் போதும், மக்கள் சோர்வு அடைந்துவிட்டனர், தாமும் அதைக் கேட்டு அலுத்துவிட்டதாக சுல்தான் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பதை விடுத்து மாநிலம், நாடு மற்றும் மக்களின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தினார்.
இன்று கிள்ளான், இஸ்தானா அலாம் ஷா அரண்மனையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு சடங்கிற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் சுல்தான் ஷராபுதீன் இந்த நினைவுறுத்தலை வழங்கினார்.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்


