அரசியல் நடத்தியது போதும், மாநிலத்திற்கும் மக்களுக்கும் சேவையாற்ற முற்படுங்கள் என்று மக்கள் பிரதிநிதிகளை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார்.
அரசியல் போதும், மக்கள் சோர்வு அடைந்துவிட்டனர், தாமும் அதைக் கேட்டு அலுத்துவிட்டதாக சுல்தான் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பதை விடுத்து மாநிலம், நாடு மற்றும் மக்களின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தினார்.
இன்று கிள்ளான், இஸ்தானா அலாம் ஷா அரண்மனையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு சடங்கிற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் சுல்தான் ஷராபுதீன் இந்த நினைவுறுத்தலை வழங்கினார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!


