நெகிரி செம்பிலான், மம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக மண்வெட்டி சின்னத்தில் குமரவேல் ராமையா போட்டியிடுகிறார். சுகாதார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் 51 வயது குமரவேல், மம்பாவ் தொகுதியில் முன்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்றத் தேர்தலில் மம்பாவ் தொகுதியில் போட்டியிடும் தாம் சாமானிய மக்களின் அடிப்படை பிரச்னைகளை சட்டமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தொழிலாளர் வர்க்கத்தின் அடையாளமான மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடுவதாக முதுகலைப்பட்டப்படிப்பை முடித்தவரான குமரவேல் கூறுகிறார்.
தாம் மம்பாவ் தொகுதியில் போட்டியிடுவதால் மற்ற கட்சிகளை எதிராளியாக தாம் கருதியது கிடையாது. அதேவேளையில் அனைத்து கட்சிகளுடனும் தாம் நட்பு பாராட்டி வருவதாக குமரவேல் தெரிவித்தார். மூவின மக்களையும் பிரதிநிதிக்க வேண்டும், அவர்களின் அடிப்படை ஜீவாதாரப் பிரச்னையை சட்டமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், அதற்கு தீர்வு காண வேண்டும் என்பது தமது நோக்கமாகும். அந்த வகையியில் நாளை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் தாம் வெற்றிப்பெறுவதற்குரிய களத்தை ஏற்படுத்திக்கொடுக்குமானால் மம்பாவ் மக்களின் நலனுக்காக தாம் தொடர்ந்து போராடப் போவதாக லஞ்ச ஊழல் எதிர்ப்பு அமைப்பின் ஸ்தாபகருமான குமரவேல் கூறுகிறார். தவிர இளையோர்களுக்கு வழிகாட்டவும், அவர்களின் நலன் சார்ந்த விவகாரங்களை முன்னெடுக்கவும் இத்தேர்தலில் களம் இறங்கியிருப்பதாக குமரவேல் குறிப்பிடுகிறார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


