பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவும் பினாங்கு, பெர்மாத்தாங் பாசிர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்தனர. காலை 9.33 மணியளவில் தமது துணைவியார் வான் அஸிஸாவுடன் வந்திருந்த பிரதமர் அன்வார், பெர்மாத்தாங் பாவு, ஶ்ரீ பெனாந்தி தொடக்கப்பள்ளியில் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஃயிஸ் ஃபசில் தமது தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாம் தவணையாக போட்டியிடுகிறார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், அவரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹம்ஸாவும் கெடா, அனாக் புக்கிட் டில் வாக்களித்தனர். காலை 9.22 மணியளவில் வாக்களித்தப்பின்னர் துன் மகாதீர் தம்பதியர் அங்கிருந்து புறப்பட்டனர். இம்முறை அதிக வாக்காளர்கள் திரண்டு இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


