பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவும் பினாங்கு, பெர்மாத்தாங் பாசிர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்தனர. காலை 9.33 மணியளவில் தமது துணைவியார் வான் அஸிஸாவுடன் வந்திருந்த பிரதமர் அன்வார், பெர்மாத்தாங் பாவு, ஶ்ரீ பெனாந்தி தொடக்கப்பள்ளியில் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஃயிஸ் ஃபசில் தமது தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாம் தவணையாக போட்டியிடுகிறார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், அவரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹம்ஸாவும் கெடா, அனாக் புக்கிட் டில் வாக்களித்தனர். காலை 9.22 மணியளவில் வாக்களித்தப்பின்னர் துன் மகாதீர் தம்பதியர் அங்கிருந்து புறப்பட்டனர். இம்முறை அதிக வாக்காளர்கள் திரண்டு இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


