பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவும் பினாங்கு, பெர்மாத்தாங் பாசிர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்தனர. காலை 9.33 மணியளவில் தமது துணைவியார் வான் அஸிஸாவுடன் வந்திருந்த பிரதமர் அன்வார், பெர்மாத்தாங் பாவு, ஶ்ரீ பெனாந்தி தொடக்கப்பள்ளியில் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஃயிஸ் ஃபசில் தமது தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாம் தவணையாக போட்டியிடுகிறார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், அவரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹம்ஸாவும் கெடா, அனாக் புக்கிட் டில் வாக்களித்தனர். காலை 9.22 மணியளவில் வாக்களித்தப்பின்னர் துன் மகாதீர் தம்பதியர் அங்கிருந்து புறப்பட்டனர். இம்முறை அதிக வாக்காளர்கள் திரண்டு இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


