பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவும் பினாங்கு, பெர்மாத்தாங் பாசிர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்தனர. காலை 9.33 மணியளவில் தமது துணைவியார் வான் அஸிஸாவுடன் வந்திருந்த பிரதமர் அன்வார், பெர்மாத்தாங் பாவு, ஶ்ரீ பெனாந்தி தொடக்கப்பள்ளியில் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஃயிஸ் ஃபசில் தமது தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாம் தவணையாக போட்டியிடுகிறார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், அவரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹம்ஸாவும் கெடா, அனாக் புக்கிட் டில் வாக்களித்தனர். காலை 9.22 மணியளவில் வாக்களித்தப்பின்னர் துன் மகாதீர் தம்பதியர் அங்கிருந்து புறப்பட்டனர். இம்முறை அதிக வாக்காளர்கள் திரண்டு இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


