சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்மின் அலி நியமனத்தை சபா நாயகர் லௌ வெங் சான் அறிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் தொடங்கிய போது பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான அஸ்மின் அலி, எதிர்க்கட்சியினருக்கு தலைமையேற்பார் என்று லௌ வெங் சான் குறிப்பிட்டார்.
முன்னதாக சிலாங்கூர் மாநிலத்தின் 56 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் என்பதுடன் சத்தியப் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!


