Jul 15, 2026
Thisaigal NewsYouTube
 1,117 வேலைவாய்ப்புகள்: இந்திய இளைஞர்கள் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் – டத்தோ அ. சிவநேசன் வலியுறுத்தல்
அரசியல்

1,117 வேலைவாய்ப்புகள்: இந்திய இளைஞர்கள் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் – டத்தோ அ. சிவநேசன் வலியுறுத்தல்

Share:

பேராக் மாநிலத்தின் 212 பக்கங்கள் கொண்ட நான்காவது ஆண்டு மேம்பாட்டு அறிக்கையை மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சரானி முகமட் இன்று அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார். இதில் 2022 முதல் தற்போது வரை மாநில அரசின் வருவாய், முதலீடு, சுகாதாரம் மற்றும் மக்களின் நலன் சார்ந்த சாதனைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வையொட்டி, மனிதவளத் துறையின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 12 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 1,117 காலிப் பணியிடங்களை வழங்கின. இதில் புரோட்டான் நிறுவனம் நிகழ்விடத்திலேயே நேர்முகத் தேர்வு நடத்தி, தகுதி பெற்றவர்களுக்கு உடனடி பணிநியமனக் கடிதங்களை வழங்கியது. இதுவரை 400 பேர் பங்கேற்ற நிலையில், 100 பேர் அடுத்தகட்டத் தேர்வுக்குத் தேர்வாகியுள்ளனர் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

இம்முகாமில் இந்திய இளைஞர்களின் பங்கேற்பு 8 விழுக்காடு மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்ட பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ அ. சிவநேசன், "வேலை கிடைக்கவில்லை என்று வீட்டில் இருப்பதை விட, இதுபோன்ற முகாம்களில் கலந்துகொண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

புரோட்டான் போன்ற நிறுவனங்கள் தரமான பயிற்சி, போட்டித்தன்மை மிக்க சம்பளம் மற்றும் தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை வழங்குகின்றன. எனவே, இந்திய இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டும்" என டத்தோ சிவநேசன் வலியுறுத்தினார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

மலாக்கா அரசில் அதிகாரப் பகிர்வு இல்லை; புத்ராஜெயா மாதிரி மட்டுமே: முதலமைச்சர்  ரவுஃப் விளக்கம்

மலாக்கா அரசில் அதிகாரப் பகிர்வு இல்லை; புத்ராஜெயா மாதிரி மட்டுமே: முதலமைச்சர் ரவுஃப் விளக்கம்

அதிரடி திருப்பம்: மலாக்கா மாநில ஆட்சியிலிருந்து  வெளியேறுகிறது ஜசெக.

அதிரடி திருப்பம்: மலாக்கா மாநில ஆட்சியிலிருந்து வெளியேறுகிறது ஜசெக.

தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தை: மலேசியாவின் ஒத்துழைப்பை உறுதி செய்த அமைச்சர்

தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தை: மலேசியாவின் ஒத்துழைப்பை உறுதி செய்த அமைச்சர்

பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் மீது 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு: வான் சைஃபுல் அதிரடி

பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் மீது 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு: வான் சைஃபுல் அதிரடி