Jul 15, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் காலம்: மலாய் சமூக உரிமை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அரசியல்வாதிகளுக்கு அழைப்பு
அரசியல்

தேர்தல் காலம்: மலாய் சமூக உரிமை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அரசியல்வாதிகளுக்கு அழைப்பு

Share:

மலாய் சமூகத்தின் சிறப்பு உரிமைகள் கூட்டரசு அரசியலமைப்பில் தெளிவாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதால், அதனை எந்தவொரு அரசியல் கட்சியும் சொந்தம் கொண்டாடவோ அல்லது அரசியலாக்கவோ முடியாது என தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவை என்பதால், இதனை எளிதில் மாற்றிவிட முடியாது என்று அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

தேர்தல் காலம் என்பதால், சமூக ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் யாரும் பேசக் கூடாது என வலியுறுத்திய அவர், அம்னோ மற்றும் தேசிய முன்னணி மட்டுமே மலாய் சமூகத்தைப் பாதுகாக்க முடியும் என கைரி ஜமாலுதீன் அண்மையில் கூறியிருந்த கருத்தை சுட்டிக்காட்டி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

மலாக்கா அரசில் அதிகாரப் பகிர்வு இல்லை; புத்ராஜெயா மாதிரி மட்டுமே: முதலமைச்சர்  ரவுஃப் விளக்கம்

மலாக்கா அரசில் அதிகாரப் பகிர்வு இல்லை; புத்ராஜெயா மாதிரி மட்டுமே: முதலமைச்சர் ரவுஃப் விளக்கம்

அதிரடி திருப்பம்: மலாக்கா மாநில ஆட்சியிலிருந்து  வெளியேறுகிறது ஜசெக.

அதிரடி திருப்பம்: மலாக்கா மாநில ஆட்சியிலிருந்து வெளியேறுகிறது ஜசெக.

தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தை: மலேசியாவின் ஒத்துழைப்பை உறுதி செய்த அமைச்சர்

தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தை: மலேசியாவின் ஒத்துழைப்பை உறுதி செய்த அமைச்சர்

பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் மீது 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு: வான் சைஃபுல் அதிரடி

பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் மீது 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு: வான் சைஃபுல் அதிரடி