Aug 16, 2026
Thisaigal NewsYouTube
அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!
அரசியல்

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

Share:

ஜசெக கட்சியானது அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டும் என அக்கட்சியின் சிறப்பு மாநாட்டில் பெரும்பாலான பேராளர்கள் வாக்களித்துள்ளனர்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அம்மாநாட்டில், பதிவான 2,099 வாக்குகளில், 1,857 வாக்குகள் அதாவது 88 சதவிகிதம் அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஆதரவாக பதிவாகின.

அதேவேளையில், 242 பேர் அரசாங்கத்திலிருந்து ஜசெக வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

நெகிரி செம்பிலான் மாநில ஜசெக செயலாளர் சா கீ சின் இந்த வாக்கெடுப்பு முடிவுகளை அறிவித்தார்.

இந்த சிறப்பு மாநாட்டில் மொத்தம் 2,223 பேராளர்கள் கலந்து கொண்டதாகவும், அவற்றில் வாக்களிக்கத் தகுதியுடைய பேராளர்களில் 52.12 சதவிகிதம் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பேராளர்களின் பங்கேற்பு குறித்து கருத்துரைத்த ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக், இது அதிகமான பங்கேற்பாகக் கருதப்படுவதாகத் தெரிவித்தார்.

இவர்கள் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் கிளைகளிலிருந்து வந்தவர்கள் என்றும், தேர்தல்களில் கூட வாக்குப்பதிவு சுமார் 70 சதவிகித அளவில் தான் தங்களுக்கு கிடைத்தது என்றும் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

மேலும், அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலுடன் ஜசெக இணைந்து செயல்படுவது குறித்து கட்சிக்குள் நிலவும் அதிருப்தி தொடர்பாக கேட்கப்பட்ட போது, பிரதமர் அன்வார் இப்ராஹிம், பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவத்துடன் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பேசியுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இந்த அரசாங்கம் நிலையாக இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பம் என்றும், மடானி அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை அவர் அங்கீகரிக்கிறார் என்றும் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

ஆனால், நாம் முன்னெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த அரசாங்கம் நிலையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அந்தோணி லோக், பேராளர்கள் முன்வைத்த கருத்துகளுக்கு கட்சி மதிப்பளிப்பதாகவும், அவற்றை அமைச்சரவை மூலம் அரசாங்கத்திடம் கொண்டு சேர்ப்பதாகவும் அந்தோணி லோக் உறுதியளித்தார்.

தற்போது ஜசெக அரசாங்கத்தில் 5 அமைச்சர்களும், 7 துணை அமைச்சர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து

“நண்பர்கள் எதிரிகளானாலும் பிகேஆர் நிலைத்து நிற்கும்” – பிகேஆர் தேசிய மாநாட்டில் ஃபாட்லீனா சீடேக் சூளுரை

“நண்பர்கள் எதிரிகளானாலும் பிகேஆர் நிலைத்து நிற்கும்” – பிகேஆர் தேசிய மாநாட்டில் ஃபாட்லீனா சீடேக் சூளுரை