பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி செய்யும் கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் இன்னும் 2 வாரங்களில் தேர்தல் இயந்திரப் பணிகளை பிகேஆர் கட்சி முன்கூட்டியே தொடங்கும் என்று அக்கட்சியின் தேர்தல் இயக்குநரும் உதவித் தலைவருமான டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை, மலாக்காவில் நடைபெற்று வரும் பிகேஆர் தேசிய மாநாட்டில் நிறைவுரையாற்றிய அமிருடின், எதிர்வரும் தேர்தலுக்கான களப் பணிகளை கட்சி உறுப்பினர்கள் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேவேளையில், தேர்தல் குழுவின் கட்டமைப்பு இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் என்றும், எதிர்வரும் தேர்தலில் பிகேஆர் தீவிரமாக களமிறங்கி போராடும் என்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அமிருடின் குறிப்பிட்டார்.
நேற்று சனிக்கிழமை கெடா மாநில மந்திரி பெசாரும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தேர்தல் இயக்குநருமான டத்தோ ஶ்ரீ முஹமட் சனூசி முஹமட் நோர், Datuk Seri சிலாங்கூரை தளமாகக் கொண்டு அந்த மாநிலத்திலும் பக்காத்தான் ஹராப்பானைத் தோற்கடிக்க பாஸ் இலக்கு கொண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
நாட்டின் முக்கிய பொருளாதார மையமாக சிலாங்கூர் மாநிலம் விளங்குவதால், அந்த மாநிலம் முக்கிய இலக்காக இருப்பதாக சனூசி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த சவாலுக்கு பதிலளித்த அமிருடின், பிகேஆர் தனது அரசியல் ஒருங்கிணைப்பின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், கட்சியின் இலக்குகள் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு யாருடன் போட்டி, யாரை வீழ்த்த போராட வேண்டும் என்பதில் பிகேஆர் மிகச் சரியாகப் பயணித்து வருவதாகவும் அமிருடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








