Aug 15, 2026
Thisaigal NewsYouTube
ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்
அரசியல்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

Share:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி இடையிலான நம்பிக்கை உறவு, ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுவதை அன்வார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்தக் கருத்து, முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் முன் வைத்த தனிப்பட்ட பார்வை என்றும் மலாக்காவில் நடைபெற்று வரும் பிகேஆர் பேராளர்கள் மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

“கைரி ஜமாலுடின் மோதலைப் பார்க்கிறார்; நான் அமைதியைப் பார்க்கிறேன்,” என்று கூறிய அன்வார், ஸாஹிட்டுடனான உறவில் தேசிய அளவில் பிரச்சினை இல்லை என்றும் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து போட்டியிட்டது, பக்காத்தான் ஹராப்பானுடனான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியதாக கைரி கூறியிருந்தார்.

இதனிடையே, ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் ஜாஹிட் மற்றும் அம்னோ ஆற்றிய பங்கை தமது காங்கிரஸ் உரையில் தாம் நன்றியுடன் குறிப்பிட்டதாக அன்வார் சுட்டிக் காட்டினார்.

மாநில அளவில் சில சிறிய பிரச்சினைகள் இருப்பது இயல்பானது என்றும், ஆனால் அது தேசிய அளவிலான உறவைப் பாதிக்கவில்லை என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்