சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சில நாட்களிலேயே வோங் சென், பி.கே.அர் கட்சியிலிருந்து இருந்து விலகி பெர்சமா கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
பூச்சோங், தாமான் புத்ரா பெர்டானா-வில் உள்ள அக்கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெர்சமா தலைவர் ரஃபிஸி ரம்லி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சுமார் 20 ஆண்டுகளாக பி.கே.அர் கட்சியிலிருந்த வோங் சென்,ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அகமத் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை விட்டு விலகி Bersama கட்சிக்கு தலைமை ஏற்றதைத் தொடர்ந்து, தானும் இறுதியில் பி.கே.அர்-ல் இருந்து விலகுவதாக முன்பே தெரிவித்திருந்தார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற Bersama கட்சியின் தொடக்க நிகழ்வில் பங்கேற்றதைத் தொடர்ந்து, மை காஸ் என்ற தொகுதி நிதி இணையதளத்திற்கான அணுகல் ரத்து செய்யப்பட்ட மூன்று PKR நாடாளுமன்ற உறுப்பினர்களில் வோங் சென்-மும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.








