அடுத்த பொதுத் தேர்தலில் பெர்லிஸ் மாநிலத்தில், அனைத்து 15 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகி வருகின்றது.
இது குறித்து பெர்லிஸ் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ ரொஸாபில் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள தகவலில், மாநில அளவில் பெரிகாத்தான் நேஷனல் உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த தேர்தலில் பெர்லிஸில் அம்னோ எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில், தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதும், களப்பணிகளை தீவிரப்படுத்துவதும் முக்கிய நோக்கமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில அரசியல் கட்சிகள் தம்மைத் தொடர்பு கொண்டு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முயன்றுள்ளதாகவும், ஆனால் தற்போது கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இதுவல்ல என்றும் ரொஸாபில் தெரிவித்துள்ளார்.








