Aug 14, 2026
Thisaigal NewsYouTube
பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து
அரசியல்

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

Share:

பிகேஆர் கட்சியானது தனது பலவீனங்களை சுயபரிசோதனை செய்து, அவற்றை ஏற்றுக்கொண்டு நிலையான கட்சியாக தொடர்ந்து முன்னேற வேண்டும் என Keadilan மகளிர் பிரிவுத் தலைவரும், கல்வி அமைச்சருமான ஃபட்லினா சிடேக் வலியுறுத்தியுள்ளார்.

மலாக்கா ஆயர் கெரோ-வில் இன்று வெள்ளிக்கிழமை துவங்கிய மகளிர் மற்றும் பிகேஆர் கட்சியின் இலைஞ்சர் பிரிவாலர் கூட்டு மாநாட்டில் உரையாற்றிய அவர், அற்பமான விவகாரங்களில் கவனம் செலுத்த இனி நேரமில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களின் குரலைக் கேட்டு, சிறந்த சேவையை வழங்குவதுடன், அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான செயல்திட்டத்தை உருவாக்க, கட்சி உறுப்பினர்கள் இந்த மாநாட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், புதிய தலைமுறையினருக்கு தலைமைப் பொறுப்புகளை வழங்கி, கட்சியின் எதிர்கால தலைவர்களாக உருவாக அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் ஃபட்லினா குறிப்பிட்டுள்ளார்.

பிகேஆர் கட்சியின் 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய மாநாடு இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்