மலாக்கா மாநிலத் தேர்தலில் குறைந்தது 15 விழுக்காடு வாக்காளர் ஆதரவைப் பெறுவதே பெர்சாமா கட்சியின் இலக்கு என்று அதன் தலைவர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் வகையில், கட்சி தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
மலாக்காவில் 15 விழுக்காடு ஆதரவைப் பெற முடிந்தால், அது பெர்சாமா கட்சியின் வளர்ச்சிக்கும், அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் அரசியல் பலத்திற்கும் முக்கிய அடித்தளமாக அமையும் என ரஃபிஸி நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களின் நம்பிக்கையை வென்று, தேசிய அளவில் கட்சியின் ஆதரவை மேலும் விரிவுபடுத்துவதே பெர்சாமாவின் நீண்டகால நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.








