பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒன்பது மாத கால ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பற்கு இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பாரிசான் நேஷனலை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகப் போவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பதவி விலகுவது மூலம் அந்த 7 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது மூலம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என்று ஆருடம் கூறப்பட்டு வருகிறது.
எனினும் பாரிசான் நேஷனலை சேர்ந்த 7 எம்.பி.க்கள் பதவி விலகப் போவதாக கூறப்படுவதை அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மறுத்துள்ளார். அப்படி ஏதும் தாம் கேள்விப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் இவ்வாறு கூறப்படுவது வெறும் வதந்தியாகும் என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார். பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அக்கு ஜன்ஜி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுட்ளனர்.
அந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீறினால் என்ன நடக்கும் என்பதை அவர்களுக்கு நன்றாக தெரியும். எனவே அந்த ஒப்பந்தத்தை மீறும் சாத்தியம் இல்லை என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

அரசியல்
பிரதமர் அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுகிறார்களா?
Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


