Mar 5, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுகிறார்களா?
அரசியல்

பிரதமர் அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுகிறார்களா?

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒன்பது மாத கால ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பற்கு இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பாரிசான் நேஷனலை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகப் போவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பதவி விலகுவது மூலம் அந்த 7 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது மூலம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என்று ஆருடம் கூறப்பட்டு வருகிறது.

எனினும் பாரிசான் நேஷனலை சேர்ந்த 7 எம்.பி.க்கள் பதவி விலகப் போவதாக கூறப்படுவதை அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மறுத்துள்ளார். அப்படி ஏதும் தாம் கேள்விப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் இவ்வாறு கூறப்படுவது வெறும் வதந்தியாகும் என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார். பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அக்கு ஜன்ஜி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுட்ளனர்.

அந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீறினால் என்ன நடக்கும் என்பதை அவர்களுக்கு நன்றாக தெரியும். எனவே அந்த ஒப்பந்தத்தை மீறும் சாத்தியம் இல்லை என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு