Mar 5, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனலில் இணைய வேண்டுமானால் நேர்மை வேண்டும்
அரசியல்

பெரிக்காத்தான் நேஷனலில் இணைய வேண்டுமானால் நேர்மை வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.05-

எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலில் மஇகா மற்றும் மசீச. இணைய விரும்பினால் தெளிவான, நேர்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று அந்த கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான கெராக்கான் இன்று வலியுறுத்தியுள்ளது.

பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சிகளான அவ்விரு கட்சிகளும் தாங்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகக் கூறி, பெரிக்காத்தான் நேஷனலை அணுகுவதாக இல்லாமல் அவை நேர்மையான நிலைப்பாட்டுடன் இணைய வேண்டும் என்று கெராக்கான் கட்சியின் பொதுச் செயலாளர் வோங் சியா ஸேன் தெரிவித்தார்.

தவிர, அரசியல் போராட்டங்கள் என்பது பருவ காலமாகவோ அல்லது பதவியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டதாகவோ இருக்கக்கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மஇகாவும், மசீச.வும் உண்மையில் மக்களிடம், குறிப்பாக இந்திய மற்றும் சீன சமூகங்களின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்க விரும்பினால், அவர்கள் பெரிக்காத்தான் நேஷனல் போராட்டத்தில் இணைவதைத் தாங்கள் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வரவேற்பும், அழைப்பும் வற்புறுத்தலின் அடிப்படையில் இல்லாமல், சுயமாக, தன்னார்வத்துடன், நேர்மையின் நிபந்தனையின் அடிப்படையில் இணைவதாக இருக்க வேண்டும் என்று வோங் சியா ஸேன் வலியுறுத்தினார்.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு