சீனர்கள் மற்றும் இந்தியர்களின் பெருவாரியான ஆதரவை கொண்டுள்ளதாக கூறப்படும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பிகேஆர் கட்சி, அண்மையில் அமைக்கப்பட்ட மாநிலங்களுக்கான ஆட்சிக்குழுவில் தனது கட்சி சார்பில் மலாய்க்காரர் அல்லாத ஒருவரைகூட ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பபட்டுள்ளது.
பினாங்கு,சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் பிகேஆர், தனது கட்சி சார்பில் மலாய்க்காரர் அல்லாத ஒருவரைகூட நியமிக்காதது மற்றும் இன்னும் அமைக்கப்படாமல் இருக்கும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் மலாய்க்காரர் அல்லாத ஒருவரைகூட இன்னும் பரிந்துரைக்காதது, பிகேஆர் பல்லின மக்களை கொண்ட கட்சி என்ற உணர்வை அறவே பிரதிபலிக்கவில்லை என்று பிகேஆர் கட்சியின் மலாக்கா மாநில பொருளாளர் கியூ டெக் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில ஆட்சியை முதல் முறையாக பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றியது. சீனர் மற்றும் இந்தியர்களுக்கு ஆட்சிக்குழுவில் வாய்ப்பு வழங்கி வந்த பிகேஆர், நேற்று அமைக்கப்பட்ட ஆட்சிக்குழுவில் தனது கட்சி சார்பில் இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு அறவே வாய்ப்பு வழங்கவில்லை என்று கியூ டெக் சுட்டிக்காட்டினார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் பிகேஆர் சார்பில் சீனர்கள் இந்தியர்கள் இல்லாதது, அக்கட்சி இதுநாள் வரையில் கட்டி காத்து வந்த பல்லின உணர்வை முற்றிலும் புறந்தள்ளிவிட்டதாக கியூ டெக் குற்றஞ்சாட்டினார். இதன் தொடர்பில் பிகேஆர் உண்மையிலேயே ஒரு பல்லின கட்சியா? என்பது குறித்து கட்சியின் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அரசியல்
பிகேஆர் சார்பில் மலாய்க்காரர் அல்லாத ஒருவரைக்கூட ஆட்சிக்குழுவில் நியமிக்கப்படாதது ஏன்?
Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


