Oct 27, 2025
Thisaigal NewsYouTube
பெர்சே இயக்கத்தின் ஆர்ப்பாட்டம், விசாரணை அறிக்கை
அரசியல்

பெர்சே இயக்கத்தின் ஆர்ப்பாட்டம், விசாரணை அறிக்கை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 27 -

போலீஸ் துறை அனுமதி வழங்காத நிலையில் இன்று நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகில் அமைதி பேரணியை நடத்திய பெர்சே இயக்க்கத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி னோர் டெல்ஹான் யாஹாய தெரிவித்துள்ளார்.

நூறு விழுக்காடு சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இன்று காலையில் நடத்தப்பட்ட பெர்சே பேரணி தொடர்பில் அதன் ஏற்பாட்டாளர்களை போலீசார் அடையாளம் கண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த பேரணி நடத்தப்படுவது தொடர்பில் குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்பு போலீஸ் துறையிடம் அறிவிப்பு செய்து இருக்க வேண்டும். எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் நடத்தப்பட்ட இப்பேரணி தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தற்போது 2012 ஆம் ஆண்டுஅமைதி பேரணி சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏ.சி.பி னோர் டெல்ஹான் குறிப்பிட்டார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்