Jun 28, 2026
Thisaigal NewsYouTube
பெர்சே இயக்கத்தின் ஆர்ப்பாட்டம், விசாரணை அறிக்கை
அரசியல்

பெர்சே இயக்கத்தின் ஆர்ப்பாட்டம், விசாரணை அறிக்கை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 27 -

போலீஸ் துறை அனுமதி வழங்காத நிலையில் இன்று நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகில் அமைதி பேரணியை நடத்திய பெர்சே இயக்க்கத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி னோர் டெல்ஹான் யாஹாய தெரிவித்துள்ளார்.

நூறு விழுக்காடு சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இன்று காலையில் நடத்தப்பட்ட பெர்சே பேரணி தொடர்பில் அதன் ஏற்பாட்டாளர்களை போலீசார் அடையாளம் கண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த பேரணி நடத்தப்படுவது தொடர்பில் குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்பு போலீஸ் துறையிடம் அறிவிப்பு செய்து இருக்க வேண்டும். எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் நடத்தப்பட்ட இப்பேரணி தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தற்போது 2012 ஆம் ஆண்டுஅமைதி பேரணி சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏ.சி.பி னோர் டெல்ஹான் குறிப்பிட்டார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி