ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன் உட்பட நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர் இன்று பதவியேற்றனர்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று 12 நாட்களுக்கு பிறகு இன்று வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் குவாலா பிலா, இஸ்தானா பெசார் செரி மெனந்தி, பாலைருங் செரி அரண்மனையில் மாநில சமஸ்தானபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் முன்னிலையில் பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டதுடன் ரகசிய காப்புப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர். இந்த பத்து பேரில் அறுவர் புதிய முகங்கள் ஆவர்.
பக்காத்தான் ஹராப்பானில் டிஏபி சார்பில் 4 பேருக்கும் , பிகேஆர் சார்பில் 2 பேருக்கும் அமானாவிற்கு சட்டமன்ற சபா நாயர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ள வேளையில் பாரிசான் நேஷனல் சார்பில் 4 பேருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி வழக்கப்பட்டுள்ளது.
வீரப்பன், அருள்குமார் உட்பட டிஏபி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள நான்கு ஆட்சிக்குழு உறுப்பினர்களும் ஏற்கனவே அப்பொறுப்புகளில் இருந்தவர்கள் ஆவர்.
டிஏபி சார்பில் ரெப்பா சட்டமன்றத் தொகுதியை 4 ஆவது முறையாக தற்காத்துக்கொண்ட எஸ். வீரப்பனுக்கு முக்கிய துறைகளில் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
டிஏபி யின் இதர சட்டமன்ற உறுப்பினர்களான நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள்குமார் , புக்கிட் கெபாயாங் சட்டமன்ற உறுப்பினர் நிக்கோல் டான், பஹாவ் சட்டமன்ற உறுப்பினர் தியோ லோல் சியோங் ஆகியோரும் ஆட்சிக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

அரசியல்
ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் உட்பட நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர் பதவியேற்றனர்
Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


