Dec 16, 2025
Thisaigal NewsYouTube
சொந்தக் கட்டடத்தை எழுப்பவிருக்கிறது ஜசெக
அரசியல்

சொந்தக் கட்டடத்தை எழுப்பவிருக்கிறது ஜசெக

Share:

கோலாலம்பூர், ஜூன்.24-

கோலாலம்பூர் மாநகரில் ஜாலான் புடுவில் கடந்த 15 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் ஜசெக. தலைமையகம், தனது சொந்த தலைமையகக் கட்டடத்தை எழுப்பவிருக்கிறது.

ஜசெக தலைமையகக் கட்டடத்தை எழுப்பும் பணிக்கு கட்சியின் உதவிப் பொருளாளரான ங் ஸே ஹான் தலைமையேற்பார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

ஜசெக.வில் அதிகரித்து வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் நிர்வாகப் பணிகளின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு சொந்தக் கட்டடத்தை எழுப்புவதற்கான காலம் கனிந்து இருப்பதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் ஜெயாவில் செயல்பட்டு வந்த ஜசெக தலைமையகம், கடந்த 2010 ஆம் ஆண்டில் கோலாலம்பூர், ஜாலான் புடு அருகில் உள்ள ஜாலான் யுவிற்கு மாற்றப்பட்டது.

ஜசெக சொந்தமாக அரசியல் பள்ளி ஒன்றையும் தோற்றுவிக்கவிருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார். அந்த பள்ளியை தோற்றுவிக்கும் திட்டத்திற்கு கட்சியின் துணைத் தலைவர் ங்கா கோர் மிங் தலைமையேற்பார் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!