முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு வழங்கப்பட்ட துன் விருது பறிக்கப்பட வேண்டும் என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயர் , இன்று நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
தாம் தொடங்கியுள்ள மலாய்க்காரர்கள் பிரகடனம் வாயிலாக ஆட்சியாளர்களுக்கு எதிராக துன் மகாதீர் அவமதிப்பை ஏற்படுத்தியிருபப்துடன் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்ற காரணத்தினால் டாக்டர் மகாதீரின் துன் விருது பறிக்கப்பட வேண்டும் என்று ராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“ஆட்சியாளர்கள் அவமதிக்கப்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இஸ்தானா நெகாராவில் அறிவுறுத்தியிருப்பதைப் போல துன் மகாதீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரச மலேசிய போலீஸ் படை தயக்கம் காட்டக்கூடாது” என்று ராயர் வலியுறுத்தியுள்ளார்.
டாக்டர் மகாதீர் அண்மைய காலமாக மலேசியர்களை பிளவுப்படுத்தும் வகையில் சினமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருவது நாட்டின் பொது அமைதிக்கு மிகப்பெரிய மிரட்டலாகும் என்று ராயர் விளக்கினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
