முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு வழங்கப்பட்ட துன் விருது பறிக்கப்பட வேண்டும் என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயர் , இன்று நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
தாம் தொடங்கியுள்ள மலாய்க்காரர்கள் பிரகடனம் வாயிலாக ஆட்சியாளர்களுக்கு எதிராக துன் மகாதீர் அவமதிப்பை ஏற்படுத்தியிருபப்துடன் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்ற காரணத்தினால் டாக்டர் மகாதீரின் துன் விருது பறிக்கப்பட வேண்டும் என்று ராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“ஆட்சியாளர்கள் அவமதிக்கப்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இஸ்தானா நெகாராவில் அறிவுறுத்தியிருப்பதைப் போல துன் மகாதீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரச மலேசிய போலீஸ் படை தயக்கம் காட்டக்கூடாது” என்று ராயர் வலியுறுத்தியுள்ளார்.
டாக்டர் மகாதீர் அண்மைய காலமாக மலேசியர்களை பிளவுப்படுத்தும் வகையில் சினமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருவது நாட்டின் பொது அமைதிக்கு மிகப்பெரிய மிரட்டலாகும் என்று ராயர் விளக்கினார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்


