May 4, 2026
Thisaigal NewsYouTube
இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு
அரசியல்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

Share:

இவ்வாண்டு ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, அரசுத் துறைகள், அரசுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அரசுடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் ஆகிய அனைத்து நிறுவனங்களும் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளே இம்முடிவுக்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், வெளிநாடுகளுக்கான அதிகாரப்பூர்வ பயணங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட அரசு துறைகளில், வெளிநாட்டு பயணங்கள் குறைக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதும், கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டிய அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு செலவுகளை மேலும் சிக்கனமாகவும், பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் போர் முற்றி, அங்கு நிலைமை மேலும் மோசமடைந்தாலும், நாம் பாதிக்கப்படாமல் இருக்க இம்முடிவானது உதவும் என்றும், பொறுப்பானதுமான அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு