Mar 11, 2026
Thisaigal NewsYouTube
இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு
அரசியல்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

Share:

இவ்வாண்டு ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, அரசுத் துறைகள், அரசுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அரசுடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் ஆகிய அனைத்து நிறுவனங்களும் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளே இம்முடிவுக்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், வெளிநாடுகளுக்கான அதிகாரப்பூர்வ பயணங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட அரசு துறைகளில், வெளிநாட்டு பயணங்கள் குறைக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதும், கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டிய அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு செலவுகளை மேலும் சிக்கனமாகவும், பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் போர் முற்றி, அங்கு நிலைமை மேலும் மோசமடைந்தாலும், நாம் பாதிக்கப்படாமல் இருக்க இம்முடிவானது உதவும் என்றும், பொறுப்பானதுமான அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்