சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக டத்தோ செரி அமிருடின் ஷாரி இரண்டாவது தவணையாக பதவியேற்றுள்ளார். சிலாங்கூர் மாநிலத்திற்கு தொடர்ந்து தலைமையேற்பதற்கு ஏதுவாக அமிருடின் இன்று காலை 11.25 மணியளவில் கிள்ளான், இஸ்தானா அலாம் ஷாவில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபிடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.இந்த பதவியேற்பு சடங்கில் சிலாங்கூர் அரசியார் தென்கு பெர்மைசூரி நோரஷிகின் மற்றும் ராஜா மூடா சிலாங்கூர்,தெங்கு அமிர் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 56 தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி 34 இடங்களை வென்ற வேளையில் பெரிக்காத்தான் நேஷனல் 22 இடங்களை வென்றது. சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவரான 43 வயது அமிருடின் ஷாரி, சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.








