Jun 25, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு செய்திகள்

25 பேர் கொண்ட குழுவினர் கும்பமேளாவிற்குப் பயணம்

Share:

இந்தியா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தின் பழைய நகரமான பிரயாக்ராஜ், 2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளாவிற்கு தற்போது களைகட்டியுள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வரும் இந்த மகாகும்பமேளாவிற்கு பிரயாக்ராஜ், ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜைன் ஆகிய நான்கு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, அடுத்த பிப்ரவரி 26 ஆம் தேதி நிறைவுபெறுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டில் 12 கோடி மக்கள் கூடிய வேளையில் இம்முறை 40 கோடி மக்கள் கூடுவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் கும்பமேளாவில் கலந்துக் கொள்ள உலகெங்கிலும் இருந்தும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

மலேசியாவிலிருந்து பலர் வெவ்வேறு குழுக்களாக மகா கும்பமேளாவிற்கு கலந்து கொள்ள புறப்பட்டுள்ளனர். நாட்டின் முன்னணி பயண நிறுவனங்களில் ஒன்றான KPS டிரவல்ஸ் நிறுவனம் இதுவரையில் 1,400 பேரை யாத்ரீக புனித பயணத்திற்கு அனுப்பியுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் கே.பி. சாமி தெரிவித்தார்.

வரும் ஜனவரி 26 ஆம் தேதி KPS சார்பில் 25 பேர் கொண்ட குழுவினர் KLIA விமான நிலையத்தின் மூலம் கும்பாமேளாவிற்கு புறப்படவிருக்கின்றனர். அந்த 25 யாத்ரீகர்களையும் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவரும், கொடை நெஞ்சருமான ஓம்ஸ் தியாகராஜன் விமான நிலையத்தில் வழியனுப்பி வைப்பார் என்று கே.பி. சாமி தெரிவித்துள்ளார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!